அவுஸ்திலேிய பிரதமரின் திடீர் அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) நேற்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக் கட்சிகளின் தன்மையும் திறனும் பற்றிய கேள்விகள் ஆகியவை குறித்த விவாதங்கள் பிரசாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் 9 ஆண்டுகால ஆட்சிக்குப்பின்னர் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட மோரிசனின் பழைமைவாதக் கூட்டணி பின்தங்கி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
மே 2019இல் நடந்த தேர்தலுக்கு முன்னர் இதேபோன்ற கருத்துக்கணிப்புகளில் மொரிசன் (Scott Morrison) பின்தங்கி இருந்தபோதும், தேர்தலில் அவர் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து நிச்சயமற்ற நிலைமை இருந்தாலும் இந்தத் தேர்தலும் பிரசாரமும் மிகவும் முக்கியமானவை என்று மொரிசன் குறிப்பிட்டார்.
அதேசமயம் முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவர்டுக்கு பின் எந்த பிரதமரும் தொடர்ந்து இருமுறை தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இந்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.