கனடாவில் வீசிய திடீர் பனி புயல்! மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
கனடாவில் வீசிய திடீர் பனி புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோவில் பனிப்புயல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. சாலைகளில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
பனிப்புயல் வழக்கத்தை விட அதிக பனியை ஏற்படுத்தியதாக ரொறன்ரோ மேயர் தெரிவித்துள்ளார்.
வானிலை சீரடைந்ததை அடுத்து சாலைகளில் குவிந்திருந்த பனி அகற்றப்பட்டது. இந்நிலையில், நாய் ஒன்று மகிழ்ச்சியுடன் பனிக்கட்டி மீது குதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.