பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் தொடர்பில் திடீர் திருப்பம்
பிரபல தென்னிந்திய கைச்சுவை நடிகர் விவேக் உயிரிழந்தமை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளmai பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக், கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் ட நிலையில் , சிகிச்சை பலனின்றி அவரது உயிரிழந்திருந்தார்.
அவரது உயிரிழப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாளே நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். இதனால், தடுப்பூசி போட்டதால்தான் அவர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும் தடுப்பூசியால் அவர் உயிரிழக்கவில்லை. விவேக்கின் மரணத்திற்கும், தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தமில்லை என்றும் மருத்துவத்துறையினரும், தமிழக அரசின் சுகாதாரத்துறையும் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முறையான பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடவில்லை என்றும், எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தேசிய மனித உரிமை ஆணையம்.
இதனையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த நோட்டீஸ் மீண்டும் விவேக் மரணம் தொடர்பான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.