காபுல் குண்டுவெடிப்பில் 200 விலங்குகளுடன் உயிர் தப்பிய நபர்!
ஆப்கானிஸ்தானின் காபுல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து பிரிட்டனை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் 200 வளர்ப்பு விலங்குகளுடன் உயிர்தப்பியுள்ளார்.
பால் பென் ஃபார்திங் என்பவர் காபுலில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஒரு மாதமாக நிதி திரட்டி காபுலில் இருந்து வெளியேர தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்த அவர், 200 நாய், பூனைகள் மற்றும் காப்பக ஊழியர்களை அழைத்துக்கொண்டு காபுல் விமான நிலையம் சென்றார். \
அமெரிக்க படையின் கட்டுப்பாடில் இருக்கும் பகுதிக்குள் தக்க நேரத்தில் நுழைந்ததால் அங்கு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து பென் ஃபார்திங்கும் அவரது வளர்ப்பு விலங்குகளும் உயிர் தப்பியுள்ளனர்.