கனடா முழுவதும் தேடப்பட்டுவந்த நபர் பொலிசாரிடம் சரண்!
நகர்ப்புற கல்கரியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் தாமே பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 15ம் திகதி Russell David Younker என்பவரின் கொலை தொடர்பில் கனடா முழுவதும் தேடப்பட்டு வந்தவர் 34 வயதான Christopher Douglas Mathers.
இந்த நிலையில் வியாழக்கிழமை தாமே பொலிசாரை அணுகி சரணடைந்துள்ளார் Mathers. சம்பவத்தன்று தாக்குதலின் போது Younker சுருண்டு விழவும், அவரை தாக்கிய நபர் அச்சத்தில் மாயமாகியிருந்தார்.
இந்த நிலையில் Younker-ஐ மீட்ட பொலிசார் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி Younker மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வந்த கல்கேரி பொலிசார், பாதிக்கப்பட்டவரும் தாக்குதலில் ஈடுபட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று நம்புவதாகக் கூறினர்,
மேலும், முன்விரோதம் காரணமாகவே இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, இந்த வழக்கில் Mathers ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதும்,
கனடா முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதும்.
விசாரணையின் பொருட்டு, அடுத்த வாரம் Mathers கல்கரிக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.