கனடாவில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்
ஓஷாவாவில் 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து டர்ஹாம் பிராந்திய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன்கிழமை பிற்பகல் சுமார் 12.30 மணிக்கு ஹார்மனி சாலை மற்றும் அடிலெய்ட் அவென்யூ பகுதியில் இருந்து குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து, சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், கத்திக் குத்து காயங்களுடன் மாணவன் ஒருவரை மீட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த மாணவர், தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 7 பள்ளிகள் விசாரணை வட்டத்தில் கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட 7 பள்ளிகளில் ஒன்றில் மாணவனாக இருக்க வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
தற்போது முதற்கட்ட விசாரணையில் இருப்பதால், மாணவன் தொடர்பிலும், சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் தகவல் வெளியிட முடியாது என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.