சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை நோயாளி பதிவு
சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை நோயாளி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே குரங்கம்மை நோயாளிக்கள் பதிவாகியிருந்த நிலையில், சுவிட்சர்லாந்திலும் ஒர் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து சமஷ்டி சுகாதார அலுவலகம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குரங்கம்மை நோயாளி பற்றி அறிவித்துள்ளது.
வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்றாளி பேர்ன் கான்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜெனீவா பல்கலைக்கழக வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை மூலம் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு பேணியவர்களுக்குகும் நோய்த் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் தொற்று உறுதியாளர் வெளிநாட்டிலிருந்து இந்த நோய்த் தொற்றை காவிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை நோயாளிக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்பாளர்கள் அனைவருக்கும் நோய் பற்றிய அறிவுறுத்தல்களை சுகாதார தரப்பினர் வழங்கியுள்ளனர்.
நோய்த் தொற்று அறிகுறி தென்படுவோர் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பதிவாகி வரும் நிலையில் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுவிட்சர்லாந்து சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.