இந்தியாவிற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்க சுவிட்சர்லாந்து ஏற்பாடு!
இந்த சவாலான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணைநிற்போம் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளது. மேலும், இந்த சவாலான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணைநிற்போம் என்றும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளது.
மேலும், இந்த சவாலான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணைநிற்போம் என்றும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.