தைவான் கட்டிட தீ விபத்து...46 பேர் பலி
தைவான் நாட்டில் ஏற்பட்ட கட்டிட தீ விபத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர்.
தைவான் நாட்டின் தெற்கு காவோஷியாங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தில் அதிகாலை மூன்றும் மணியளவில் திடீர் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. சிறிது நேரத்தில் வீசிய காற்றின் காரணமாக தீ அடுத்தடுத்து தளங்களுக்கு பரவியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயினால் உருவான கரும் புகையானது வானை முட்டும் அளவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.