ஆப்கானியர்களுக்கு தாலிபான் விடுத்துள்ள பகிரங்கமான எச்சரிக்கை!
ஆப்கன் மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிபொருள்கள் போன்றவற்றை ஒரு வாரத்திற்குள் எமிரேட் அதிகாரிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்கள் பலகட்ட தாக்குதல் நடத்தி அந்நாட்டை கடந்த 15ஆம் திகதி கைப்பற்றினர். அதிலிருந்து தாலிபான்கள் சொல்ல முடியாத அளவிற்கு அட்டகாசம் செய்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் கொடூர முகத்திற்கு பயந்து ஆப்கன் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வருகின்ற 31ஆம் திகதிக்குள் அமெரிக்க ராணுவ படைகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் பிறகு தான் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் ஆப்கானில் இசை மற்றும் பெண்கள் மூன்று நாட்களுக்கு மேல் வெளியூருக்கு செல்வதாக இருந்தால் பாதுகாவலர் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்று புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தாலிபான் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid டுவிட்டரில் கூறியதாவது, காபூலில் வாழும் மக்கள் வைத்திருக்கும் போக்குவரத்து வாகனங்கள், ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற அரசு பொருட்கள் போன்றவற்றை ஒரே வாரத்திற்குள் மிரேட் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.