ஒருபுறம் தலிபான்கள் மகிழ்ச்சியில் திளைக்க ஆப்கானின் மற்றொரு பகுதியை கொள்ளையிடும் பிரபல நாடு
அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறியதால் ஒருபுறம் தலிபான்கள் மகிழ்ச்சியில் திளைக்க ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதியை அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டு படைகள் முழுமையாக நாட்டை விட்டு வெளியேறின. இதை கொண்டாடும் வகையில் தலிபான், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மகிச்சியில் திளைத்தனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானின் helmand மாகாணத்தில் உள்ள Bahramcha பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் Bahramcha பகுதியில் உள்ள பளிங்கு கல் சுரங்கத்திற்கு அருகே சோதனைச் சாவடி அமைத்துள்ள பாகிஸ்தான், அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அங்கிருந்து பளிங்கு கல்களை லொறிகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடத்திய செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் Bahramcha பகுதியில் லொறிகளில் பளிங்கு கல் கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.