இலங்கையில் இன்று முதல் பயணத்தடை நீக்கம்! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலாக பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் கடந்த மே மாதம் சில கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையே பொதுமக்களுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை விளக்கினால் நாட்டில் 3வது அலை கொரோனா எழக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் மாகாணங்களுக்கு இடையே பயணத்தடையை அந்நாட்டு அரசு ஞாயிற்றுகிழமை விளக்கி கொண்டது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இந்த மாதம் 1 ஆம் திகதி ரத்து செய்யப்பட்டாலும் பயண தடை தொடர்ந்து இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயணத் தடை நீக்கப்பட்டாலும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்குமாறு சுகாதார சேவைகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.