"அன்புகாட்டி மாணவியை கொடூரமாக கொன்ற ஆசிரியர்"...ரஷ்யாவில் இடம்பெற்ற சம்பவம்
ரஷ்யாவில் தனது மாணவியை அனுபுகாட்டி ஆசிரியர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த 40 வயதான உலியான லான்ஸ்காயா என்ற ஆசிரியர் உள்ளார். இவர் 9 வயது மாணவியான சோபியா Zhavoronkova மற்றும் தோழிகள் அனைவருக்கு அன்புக் காட்டி சாப்பிட சில பொருட்களும் வாங்கி கொடுத்துள்ளார்.
அதன் பின்பு sofia காணாமல் போகியுள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் sofia வுடன் கடைசியாக இருந்த குழந்தையை விசாரித்தபோது sofia ஆசிரியருடன் இருந்ததை பொலிஸார் உறுதி செய்து அவர் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு சிறுமி Sofiaவின் முகம், தலை போன்ற பகுதிகள் சிதைக்கப்பட்டு மிகவும் கொடுமைக்கு ஆளான நிலையில் அவளின் சடலத்தைபொலிஸார் மீட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஆசிரியர் லான்ஸ்காயா ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை இன்னொரு பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.