இனி வாழ்வதில் பலனில்லை... இளம் வயது மகள் தொடர்பில் கண்ணீர் விட்டு கதறிய கனேடிய தந்தை
ஸ்கார்பரோ பகுதியில் சாலையை கடக்கையில் விபத்தில் சிக்கி இறந்த இளம் பெண் தொடர்பில் அவரது தந்தை கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
தமது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கலங்கிய அவர், தமது வாழ்க்கையின் மொத்த சொத்தையும் இழந்து விட்டதாகவும், இனி வாழ்வதில் பலனில்லை எனவும், வியாழக்கிழமை நடந்த இறுதிச்சடங்கின் போது கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை பிர்ச்மவுண்ட் சாலையில் உள்ள டான்ஃபோர்த் அவென்யூவைக் கடக்கும்போது 17 வயதான நதியா மொசும்தர் எதிரே வந்த வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயங்கலுடன் மீடக்கப்பட்ட நதியா, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
தமது மகள் தொடர்பில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு செல்ல கிளம்பிய Azizul Mozumder போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள, அவரது நண்பர் ஒருவர் நதியா மரணமடைந்த தகவலை மருத்துவமனையில் இருந்து தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
ஹாமில்டனில் பிறந்த நதியா 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை பகல் 11.45 மணியளவில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் தெரிவிக்கையில்,
பிர்ச்மவுண்ட் சாலையில் தெற்கு நோக்கி சென்ற ஒரு மினிவேன் நதியா மீது மோதியதாகவும், 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சாரதியாக இருந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.