கனடா மொன்றியல் பகுதியில் பாடசாலைக்கு எதிரில் சிறுவன் மீது கத்தி குத்து
கனடாவின் மொன்றியல் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு எதிரில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
16 வயதான மாணவரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார், மூன்று பதின்ம வயது சிறுவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
செயின்ட் மிச்சல் போலிவார்ட் என்னும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள Collège Reine-Marie என்ற தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் எதிரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் முதுகு மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுவனுக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் மொன்றியால் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் காணப்படும் சிசிடிவி காணொளிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வார கால இடைவெளியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற இரண்டாவது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Anjou பகுதியில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் 14 வயதான சிறுவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.