ரஷ்யாவில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீவித்து! ஒருவர் பலி
ரஷ்யாவில் நிலக்கரிச்சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து ஒன்று ஏற்பட்டதாகவும் அதில் தற்போது ஒருவர் உயிரிழந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் இன்று 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தால் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 236 பேரை உயிருடன் மீட்டனர் எனவும் மேலும், 75 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
குறித்த இந்த விபத்தில் தற்போது ஒருவர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிய 75 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் விபத்து நடைபெற்று சில மணி நேரம் ஆனதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.