பிரான்ஸில் பயங்கர சம்பவம்: 3 பொலிஸாருக்கு நேர்ந்த விபரீதம்!
பிரான்ஸில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்தியும், மேலும் இரு அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டும் தப்ப முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தெரியவரவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது,
மேற்கு பிரான்ஸில் லா சபெல்லே என்ற இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியை ஒரு நபா் திடீரென கத்தியால் குத்திவிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பினாா்.
ஹெலிகாப்டர்கள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் பொலிஸாா் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நபர் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனா். அப்போது அந்த நபா் துப்பாக்கியால் சுட்டதில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பின்னா், அந்த நபரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது முயற்சியின்போது காயமடைந்த அந்த நபா் உயிரிழந்தார். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் பிரான்ஸ் நாட்டை சோந்தவா் எனவும், தனது கடுமையான மத நடைமுறைகள் காரணமாக அவா் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தாா் எனவும் உள்துறை அமைச்சா் ஜெரால்டு டாா்மானியன் தெரிவித்தாா்.
பிரான்ஸில் பிராந்திய தோதல்கள் அடுத்த மாதமும், அதிபா் தோதல் அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொலிஸார் மீதான தாக்குதல் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அண்மையில் காவல் துறை அதிகாரிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.