வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த தாய்லாந்து!
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. கொரோனா தொற்றால் சுற்றுலா துறையை பெரிதும் நம்பியுள்ள தாய்லாந்தின் பொருளாதாரத்தை மோசமாக பாதித்தாக அந்நாட்டு தகவல் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 4 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு (2020) கொரோனா வைரஸ் அச்சுறுதல் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை 80 சதவீதம் வரை குறைந்தது.
இந்நிலையில் சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் விதமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாய்லாந்து வருவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை 1½ ஆண்டுகளுக்கு பிறகு அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இதன்படி, தொற்று ஆபத்து குறைவாக இருக்கும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்காக எல்லைகளை திறப்பதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
எனினும் தாய்லாந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸையும் போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலா பயணிகள் தாய்லாந்து வந்த பிறகு தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லை என தெரிவித்துள்ளனர்.