தாய்லாந்தில் தினசரி கொரோனா பாதிப்பின் அதிபட்ச எண்ணிக்கை
தாய்லாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது,
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 312 கொரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும்.
இத்துடன், 8,285 போ கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுதவிர, கடந்த 24 மணிதியாலத்தில் 20,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 968,957-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, தாய்லாந்தில் 7,53,338 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 207,334 போ தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5,615 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.