பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக்காயப்படுத்த வேண்டாம் - தாலிபான் செய்தி தொடர்பாளர்
தாலிபான் பயங்கரவாத அமைப்பு முன்னதாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது.
தலைநகர் காபூலில் முன்னதாக நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்கள் இன்னும் தாலிபான்களால் கைப்பற்றப்படாமல் உள்ள நிலையில் அவற்றை கைப்பற்ற தாலிபான் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நங்காகார் மாநிலத்தின் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது:- ஆப்கானிஸ்தான் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்த வேண்டாம் என்று தங்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடிமக்களை அச்சுறுத்த தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை நோக்கி தாலிபான்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக உள்ளூர் பெண்கள் தெரிவித்தாக உள்ளூர் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.