அமெரிக்க படைக்கு ஆப்கான் விதித்த கெடு நாளையுடன் முடிவு
அமெரிக்க நாட்டு படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் அமெரிக்க படைகள் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் அமெரிக்க படைகளை முழுமையாக திரும்ப பெற்று கொள்வதாக அந்நாட்டின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அதனால் அங்கு நடந்து வந்த உள்நாட்டு போரில் தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து அங்கிருக்கும் அமெரிக்கர்களை மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுப்பட்டது. மேலும், ஆப்கானிய மக்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. கடந்த 15 நாட்களில் 1,20,000 ஆப்கானியர்கள் மீட்கபட்டுள்ளனர். ஆப்கான் முழுவதும் தாலிபான்கள் கைபற்றியிருந்தாலும் காபூல் விமானநிலையம் மட்டும் அமெரிக்க படைகளின் கட்டுபாட்டில் இருந்தது. அமெரிக்க படைகள் கொடுக்கபட்ட கால அவகாசத்திற்கு மேல் ஆப்கானில் இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அமெரிக்க படைகளுக்கு விதிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. இதனால் அங்கிருக்கும் அமெரிக்க படைகள் முழுவதுமாக நாடு திரும்ப வாய்ப்புள்ளது.
கடந்த 2001 முதல் ஆப்கானில் அமெரிக்க படைகள் பாதுகாப்பில் ஈடுப்பட்டது குறிப்பிடதக்கது.