72 மணி நேரத்திற்குள் காபூல் தனிமைப்படும்...அமெரிக்கா தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை அழிக்க உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான பகுதிகளை அரசு படைகளிடம் இருந்து தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
அந்நாட்டின் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டுள்ளது. ஆனால், தற்போது அப்படைகள் அங்கிருந்து விரைவில் வெளியேறிவிடும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கர்கள் மற்றும் இங்கிலாந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். அதேபோல் இந்திய அரசும் இந்தியர்களை உடனடியாக அந்நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தியது.
இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தலைவர் அண்டோனியோ குட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருதரப்பு மோதலில் கடந்த மாதம் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருதரப்பினரின் மோதல் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த சூழலில் மனித நேய உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரம் தாலிபான்களால் தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது காபூலில் எல்லை வரை தாலிபான்கள் தங்கள்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
இதன் காரணமாக அங்குள்ள அமெரிக்கா தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள ரகசிய ஆவணங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.