"பெட்ரோல்,டீசல் விலையேற்றத்துக்கு தாலிபான்கள் தான் காரணம்"...எம்.எல்.ஏ.வின் சர்ச்சைப்பேச்சு
'ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்ததே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்,'' என, கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ., -எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தர்வாத் மாவட்டம், ஹூப்ளி தர்வாத் மேற்கு தொகுதியின் பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அரவிந்த் பெல்லாட்.
இவர் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு உள்ளது பற்றி 'டுவிட்டரில்' அரவிந்த் பெல்லாட் கூறியிருப்பதாவது,
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதுாக்க துவங்கியதிலிருந்தே சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்கள் வினியோகத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அரவிந்தின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.