மறைந்த எலிசபெத் மகாராணியை பெருமைப்படுத்திய இங்கிலாந்து வங்கி!
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) காலமானதைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணியின் படத்தைக் கொண்ட நாணயத் தாள்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ராணியின் உருவம் கொண்ட தற்போதைய நாணயத் தாள்கள் தொடர்ந்து செல்லத்தக்கவை என்றும், இந்நிலையில், விரைவில் நாணயத் தாள்கள் தொடர்பான கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து வங்கி நாணயத் தாள்களில் தோன்றிய முதல் மன்னர் ராணி எலிசபெத்(Elizabeth) ஆவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எலிசபெத்(Elizabeth) ராணியின் மரணம் குறித்து நான் அறிந்தது முதல் பிரித்தானியா முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
வங்கியில் உள்ள அனைவரின் சார்பாக அரச குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி(Andrew Bailey) குறிப்பிட்டுள்ளார்.