ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம்...கொலையா ? தற்கொலையா ?
Saint-Martin ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பாரிஸின் 10வது வட்டாரத்தில் உள்ள குவாய் டி வால்மியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக் கண்டார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அவர் அருகே ஒரு சூட்கேஸ் மிதந்து கொண்டிருந்தது. பெட்டியும் மீட்கப்பட்டது.
அதில் பெண்ணின் அடையாள அட்டை, உடை மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. குறித்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயாவார் மற்றும் குடும்ப வன்முறை காரணமாக கொலையா அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்பு பணியின் போது ஆற்றின் அனைத்து போக்குவரத்தும் தடைபட்டது.
உடல் பரிசோதனைக்காக தடயவியல் நிபுணருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.