பொலிசாரைக் கொலை செய்த குற்றவாளி... சிறையிலேயே குடும்பம் நடத்தும் வேடிக்கை
கனடாவில், பொலிசார் ஒருவரைக் கொலை செய்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், சிறையிலேயே குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக்கொண்ட வேடிக்கை நிகழ்ந்துள்ளது. சிறை என்பதே செய்த தவறுக்கு வருந்துவதற்காக கொடுக்கப்படும் தண்டனைதான்.
ஆனால், வெளி உலகுக்கும் சிறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல், குடும்பம் நடத்தி, குழந்தையும் பெற்றுக்கொள்ள கொலைக்குற்றவாளி ஒருவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Emrah Bulatci என்பவர், 2007ஆம் ஆண்டு, தனக்கு 23 வயது இருக்கும்போது, போதைப்பொருள் விற்கும்போது, Const. Christopher Worden என்ற பொலிசாரிடம் சிக்கியிருக்கிறார். அப்போது அவரிடமிருந்து தப்புவதற்காக Bulatci அவரை துப்பாக்கியால் சுட்டதில் அந்த பொலிசார் இறந்துபோனார்.
தலைமறைவான Bulatciயை ஆறு நாள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் பொலிசார் கைது செய்தனர். 2009ஆம் ஆண்டு, Bulatciக்கு 25 ஆண்டுகள் வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், திருமணமும் செய்து குழந்தை ஒன்றிற்கும் தந்தையாகியுள்ளார் Bulatci. அதாவது, கனடாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகள், தங்கள் மனைவி குழந்தையுடன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 72 மணி நேரம் தனியாக நேரம் செலவிட அனுமதி கொடுக்கப்படுகிறதாம்
.
அதற்காகவே, இரண்டு படுக்கையறைகள், சமையலறை மற்றும் ஒரு ஹால் கொண்ட ஒரு கட்டிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
இப்படி இருக்கும்போது, சிறையிலிருந்துகொண்டே Bulatci திருமணமும் செய்து குழந்தையும் பெற்றுக்கொள்வது ஆச்சரியமான விடயமா என்ன?