இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளை எச்சரித்த தூதரகம்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அறுகம்குடா பகுதியில் சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே , குறித்த பகுதிக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் சம்பவங்கள் இடம்பெற்றால் 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் இலங்கையில்யுள்ள தனது பிரஜைகளுக்கு அமெரிக்கத்தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Security Alert for American Citizens in Sri Lanka: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Embassy staff are restricted from the area until further notice. U.S. citizens are strongly urged to avoid… pic.twitter.com/Ts77TACsuw
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 23, 2024
மேலும் தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்களை வைத்திருக்குமாறும் இலங்கையின் உள்ளூர் ஊடகங்களை பார்வையிடுமாறும் அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
