பிரான்சின் போர்தோ உருமாறிய வைரசால் ஆபத்தா? நிபுணர்கள் சொல்வது என்ன?
பிரான்சின் பல பகுதிகளில், மிக வேகமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பிரான்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அங்கு இன்னும் முழுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்நிலையில், தற்போது நாட்டில் மிகவும் வேகமாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வைரஸ் போர்தோவில் 64 பேரிற்கு உறுதி செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
அதே சமயம், தற்போது இது போர்தோ உருமாறிய வைரஸ் என கூறப்படுகிறது. இது இந்திய வைரஸ் மற்றும் பிரித்தானிய வைரசின் ஒன்றிணைந்த உருமாறிய வைரஸாக உள்ளதாகவும், இன்னமும் யாரும் இதனால் தீவிரசிகிச்சைப் பிரிவிற்குச் செல்லவில்லை எனவும் பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வைரஸ் கொரேனாத் தடுப்பு ஊசிக்கு கட்டுப்படுமா அல்லது அதனை மீறுமா என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.