பிரான்ஸில் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட அரசாங்கம்!
பிரான்ஸில் இந்த ஆண்டு, தரம் உயர்த்தப்பட்ட, பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை, இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று, பாடசாலைக்கு திரும்புவதற்கான கொடுப்பனவு 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிப்பு இல்லாத தொகை முதல் பகுதியில் செலுத்தப்படும் என்பதால், அதன் கட்டணம் இரண்டு தவணைகளில் செய்யப்படும் என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்டியு்ளளது.
மேலும், சில பகுதிகளில் இந்த கொடுப்பனவு ஏற்கனவே கடந்த 2 ஆம் திகதி பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இந்த கொடுப்பனவை பெறும் மக்கள் எதிர்வரும் 16ஆதம் திகதி வரை காத்திருக்க வேண்டும்.
இந்த இரண்டாவது கொடுப்பனவு இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தின் தொடக்கத்தில் உரிய மாணவர்களை சென்றடையும் தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் பாடசாலை செல்லும் மாணவர்களை கொண்ட குடும்பங்களுக்கான உதவியாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் புருனோ லு மேயர் (Bruno Le Maire)தெரிவித்துள்ளார்.
பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கும், பாடசாலை சீருடைகள் உள்ளி பல்வேறு பாடசாலை மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கமைய உதவித் தொகை அதிகரிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.