பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை
பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்-வியாழக்கிழமைக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் ஆம்பிள்யூஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக அகதிகள் சட்டவிரோத பயணம் மேற்கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து, Lens நகர காவல்துறையினர் மூவர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
இப்போது சந்தேக நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து அதிகாரிகள் நோக்கி சுட்டுள்ளார். இதில் அதிகாரிகள் காயமடையவில்லை என்றபோதும் தொடர்ச்சியாக குறித்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதனால் அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தினர்.
அதிகாரிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் குறித்த நபர் சாவடைந்துள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.