அவுஸ்ரேலியாவில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது ; அரசாங்கம் அறிவிப்பு
அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியமானது என அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை Cகொரோனா தொற்றின் புதிய கொத்து மூன்று நாட்களில் 15 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலிய கால்பந்து லீக் போட்டியில் கலந்து கொண்ட சுமார் 23,400 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருந்தநிலையில் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் சுய தனிமைப்படுத்தபட்டுள்ளனர்.
இதேவேளை நகரில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற உட்புற இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பொது கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் வரம்புகள் விதிக்கப்பட்டன.
அத்துடன் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு வெளிநாட்டு பயணிக்கு இந்திய மாறுபாட்டைக் கொண்ட வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் அது எவ்வாறு சமூகத்தில் பரவியது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.