அமெரிக்காவை நடுங்க வைத்த வடகொரிய அதிபர்!
ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை அன்று வடகொரியா இந்த ஆண்டில் 12வது முறையாக ஆயுத சோதனைகளை நடத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட, நீண்ட தூர Hwasong-17 ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
Hwasong-17 பிரம்மாண்ட ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதலை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் வழக்கம் போல் கின் ஜாங் உன் அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் Hwasong-17 ஏவுகணை நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 15,000 கிமீ (9,320 மைல்கள்) வரை பறக்க முடியும். மேலும் அமெரிக்காவின் நிலப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சென்று தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை சுமார் 25 மீ (82 அடி) நீளம் கொண்டதாக கூறப்படும் நிலையில், Hwasong-17 உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பாக உள்ளது. இதேபோல் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் வாசோங் - 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார். சக்திவாய்ந்த ஆயுதங்கள் அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும்.
அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும் என்றார். ஒருவராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுதங்கள் திறன்கள், அமோகமான ராணுவ பலம் இருந்தால்தான், போரைத் தடுக்க முடியும், நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.
அணு ஆயுத போர் ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கிம், வட கொரியா இன்னும் "சக்தி வாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை" உருவாக்கும் என்றும், தனது நாடு "அணு ஆயுதப் போரைத் தடுப்பதை இன்னும் தீவிரமாகச் செய்யும்" என்று அவர் கூறியதாக சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.