இந்தியாவை கலங்கடிக்கும் கொரோனா; ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது ; 3,523 பேர் பலி!
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளதுடன் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன.
ஒரே நாளில் 3,86,452 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதன் காரணமாக 9வது நாளாக 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை நாடு சந்தித்து வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் 4 லட்சம் எண்ணிக்கையை இன்று கடந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் இதுவரை 15 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 635 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.