லண்டனில் ஆபத்தானவராக அடையாளமிடப்பட்ட நபர்; பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என கூறி நபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு எச்சரித்துள்ளனர்.
அதன்படி Daniel Joslin (40) என்பவர் எப்போதும் தாடியுடன் இருக்கும் நிலையில் தற்போது தாடியை எடுத்துவிட்டு தலைமுடியையும் மொட்டையடித்துவிட்டு சுற்றி வருவருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சந்தேகநபரின் அவரின் சமீபத்திய சிசிடிவி புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளார்.
Daniel மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி அறிவிப்புக்கு இணங்கத் தவறியதற்காக பொலிஸாரால் தேடப்படுகிறார்.
அத்துடன் சந்தேகநபர் Daniel ரக்பி ரயில் நிலையத்தில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நிபந்தனை பிணையை மீறிய வழக்கும் அவருக்கு எதிராக உள்ளது.
குறித்த நபர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர் ஆபத்தானவராக கருதப்படுவதால், Daniel-ஐ யாரும் அணுக வேண்டாம் என்றும், அவரை கண்டால் உடனடியாக 999 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
