தெருவில் பெரும் தொகை பணத்தை வீசி எறிந்த நபர்; காரணம் என்ன தெரியுமா?
நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக குறித்த நபர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, எவ்வளவோ பணம் செலவு செய்தும், குணம் பெற இயலாமல் , அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் அவர் தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலில், எனது பெயரில் இருக்கும் பல இலட்சம் பணத்தையும் தெருவில் வீசி எறிந்து விடு: இந்தப் பணத்தால் உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதை மக்கள் உணரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நண்பரின் விருப்பத்தை ஏற்ற அந்த நண்பன் இலட்சக் கணக்கான பணத்தை வீதிகளில் வீசி எறியும் காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
அவர் வீசி எறிந்த பணத்தை மக்கள் எடுப்பதையும் அக்காணொளியில் காணக்கூடியதாக உள்ளது.