பிரான்ஸ் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர்!
பிரான்ஸில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து எரிபொருட்கள் மீது விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் எலிசபெத் போர்ன்(Élisabeth Borne) அறிவித்துள்ளார்.
கொடுப்பனவு தொகை குறித்து பிரதமர் விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றபோதும், ஜனவரி முதலாம் ஆம் திகதியில் இருந்து விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து எரிபொருள் மீதான புதிய கொடுப்பனவை பெறக்கூடியதாக இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.
வேலை மற்றும் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த கொடுப்பனவு ஏதுமானதாக இருக்கும் எனவும், பிரான்ஸின் 50 சதவீதமான குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற தகுதியுடையவர்களாக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இது அனைத்து வீடுகளிலும் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும், தற்போதைய எரிபொருள் தள்ளுபடி இந்த ஆண்டின் இறுதியில் முடிவடையும் என பிரதமர் எலிசபெத் போர்ன் கூறினார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு கணிசமாக உதவும் நோக்கத்துடன் நாங்கள் இன்னும் திட்டமிட்ட அளவில் பணியாற்றி வருகிறோம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய மேலும் பல உதவி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எரிபொருள் மீது அரசு வழங்கி வந்த 30 சதம் விலைக்கழிவு இவ்வாரத்தில் இருந்து 10 சதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது டிசம்பர் 30 ஆம் திகதி வரை இந்த 10 சதம் விலைக்கழிவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.