பொதுமக்கள் நடமாட நாளை முதல் வரவுள்ள நடைமுறை
நாளை முதல் தேசிய அடையாள இலக்கங்களின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதிக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற அனுமதிக்கப்படுவார் எனவும், அது, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும், மே மாதம் 31ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் எஅன்வும் கூறப்படுகின்றது.
தேசிய அடையாள எண், ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் இலக்கங்கள்1,3,5,7,9 இல் முடியும் நபர்கள், ஒற்றை எண் திகதிகளில் வீட்டை விட்டு வெளியேறலாம் என்றும், இவர்கள் நாளை 13ஆம் திகதி வெளியில் செல்லலாம். அதேபோல 0,2,4,6,8 எண்களைக் கொண்டவர்கள் இரட்டை எண் திகதிகளில் வீடுகளை விட்டு வெளியேறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த நடைமுறை பொருந்தாது.