தலிபான்களின் எழுச்சி ; இங்கிலாந்துக்கு ஆபத்து?
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சி இங்கிலாந்தில் உள்ள பயங்கரவாதிகளை தைரியப்படுத்த வாய்ப்புள்ளது என MI5 இன் இயக்குனர் ஜெனரல் கென் மெக்கலம் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரே இரவில் மாறாது என்றாலும், தீவிரவாதிகளுக்கு மன உறுதியை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்படுவது அதிகரிக்கும் போது நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
இங்கிலாந்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 31 தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் மெக்கலம் கூறினார். தொற்றுநோய் காலத்தில் மட்டும் ஆறு தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவை பெரும்பாலும் இஸ்லாமிய தீவிரவாத சதித்திட்டங்களாக இருந்தாலும், தீவிர வலதுசாரி பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்ட பெருகிவரும் தாக்குதல்களும் இருந்தன என்றார்.
மேலும் இங்கிலாந்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல், ஒரு உண்மையான மற்றும் நீடித்த விஷயம் என்று நான் வருந்துகிறேன், என்றும் அவர் மேலும் கூறினார்.