குழந்தை மீது திடீரென உருண்டு விழுந்த பாறை: கனடாவில் ஒரு துயர சம்பவம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது பெற்றோருடன் ரிசார்ட் ஒன்றுக்கு சென்றிருந்த குழந்தைக்கு எதிர்பாராத துயரம் ஒன்று சம்பவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Mount Washington Alpine Resort என்ற இடத்துக்கு அந்த கனேடிய குடும்பம் சென்றிருந்த நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை ஒன்று தன் சகோதரனுடன் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, திடீரென பெயர்ந்து உருண்டுவந்த பாறை ஒன்று அவள் மீது மோதியுள்ளது.
நிலைகுலைந்து சரிந்த அவளைக் கண்டு பதறிப்போன அவளது பெற்றோர், அவளைத் தூக்கிக்கொண்டு தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு ஓடியிருக்கிறார்கள்.
அங்குள்ள அலுவலர்கள் அவளுக்கு முதலுதவி அளித்ததுடன், அவசர உதவியையும் அழைத்துள்ளார்கள். ஆம்புலன்ஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கு விரைய, மருத்துவ உதவிக்குழுவினர் அந்த குழந்தையைக் காப்பாற்றப் போராடியும் அவளைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கிறது.
அங்குள்ள அலுவலர்கள் அவளுக்கு முதலுதவி அளித்ததுடன், அவசர உதவியையும் அழைத்துள்ளார்கள். ஆம்புலன்ஸ் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கு விரைய, மருத்துவ உதவிக்குழுவினர் அந்த குழந்தையைக் காப்பாற்றப் போராடியும் அவளைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கிறது.