மற்றொரு பனிப்போரின் இரகசிய நகர்வு! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
கருங்கடலை தற்பொழுது போர் மேகங்கள் படிப்படியாகச் சூழ ஆரம்பித்துள்ளன. மற்றொரு பனிப்போரின் ஆரம்பமாக கருங்கடல் மாறிக்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
3ம் உலக யுத்தத்தின் ஒரு காரணியாக கருங்கடல் சார்ந்த பிரச்சினை உருவாகிவிடலாமோ என்று அச்சம் கொள்ளும் வகையில் நிலமை மோசமாகிக் கொண்டிருக்கின்றது.
கருங்கடலில் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் ஒரு பக்கம் ரஷ்யா - மறுபக்கம் அமெரிக்கா தலைமையிலான நேட்டேப் படைகள் என்று நடைபெறுகின்ற மிகப் பெரிய பலப்பரீட்சை பற்றியும், அதன் பின்னணி பற்றியும் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: