ஏயார் கனடா நிறுவனத்தின் 800 பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
கனடாவின் முதனிலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா (Air Canada) நிறுவனத்தின் 800 பணியாளர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முழு அளவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 800 பணியாளர்கள் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். எயார் கனடா (Air Canada) நிறுவனத்தில் பணியாற்றி வரும் அநேகமான பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸைகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர்.
தமது நிறுவனத்தின் 96 வீதமான பணியாளர்கள் பூரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கேல் ரூசோ (Michael Rousseau) தெரிவித்துள்ளார்.