இங்கிலாந்தில் பாலாறாக மாறிய டுலைஸ் ஆறு!
பால் ஏற்றிவந்த டேங்கர் லொறி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததால் இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸ் (Wales) நகரில் கார்மர்தென்ச்ரிங் (Carmarthenshire) என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு (river of Tulis)பாலாறாக மாறியுள்ளது.
பால் ஏற்றிக்கொண்டு கார்மர்தென்ஸ்ரீங் (Carmarthenshire) பகுதியில் உள்ள சாலையில் நேற்று டேங்கர் லொறியில் பால் ஏற்றுக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த டேங்கர் லொறி டுலைஸ் (Tulis) ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான லொறியில் இருந்து சாரதி பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆற்றுக்குள் கவிழ்ந்த டேங்கர் லொறி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், டேங்கர் லொறியில் இருந்த பால் முழுவதும் ஆற்றில் கலந்ததால் ஆறு முழுவதும் வெண்மை நிறத்தில் பாலாறாக காட்சியளித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.