டொரொண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் கைது
கனடாவின் டொரொண்டோவில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாஃபியா போன்ற கும்பலான ‘த யூனியன்’ (The Union) தொடர்பாக விசாரணை ஒன்றின் போது, டொரொண்டோ போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 111 குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். ‘ப்ராஜெக்ட் யாங்கீ’ (Project Yankee) எனப் பெயரிடப்பட்ட இந்த விசாரணை கடந்த 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டது.
டொரொண்டோ பெரும்பாக பகுதியில் வாகனங்களை பழுதுபார்த்தல் மற்றும் பொருத்துதல் நிறுவனங்களுக்கு உதவுவதாக கூறி இந்தக் கும்பல் பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த விசாரணை நிறைவடைந்து, கடந்த வாரம் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இக்கும்பல் வன்முறையும் மிரட்டல்களையும் பயன்படுத்தியதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரதான சந்தேகநபர்கள் பலர் காவலில் இருக்கின்றனர், மேலும் இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பட்டியல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.