பிரித்தானியாவில் 11,700 பேரை காப்பாற்றிய தடுப்பூசி
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசியால் 11,700 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு தடுப்பூசி தான் நிரந்தரமான முடிவு என பிரித்தானியா தடுப்பூசி போடுவதில் தீவிரமாக இறங்கியது.
அதன் படி, தங்கள் நாட்டு மக்களுக்கு, பைசர், ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் போட அந்நாடு அரசு அனுமதியளித்தது. இதன் காரணமாக அங்கு 70 சதவீத கொரோனா தொற்று குறைந்ததுடன் மரணங்கள், கடுமையான பாதிப்புகள் தடுக்கப்பட்டன. இதையடுத்து, தடுப்பூசி குறித்து பிரித்தானியாவின் பொது சுகாதார துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த ஏப்ரல் இறுதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் படி, 11 ஆயிரத்து 700 மரணங்களும், 33 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் சுகாதாரச் செயலர் மாட் ஹன்காக் கூறுகையில், 'கொரோனாவால் 70 - 80 வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசிக்கு பின் நிலைமை மாறியது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே வாழ்நாளின் முக்கியமான பணி என கூறியுள்ளார்.
அத்துடன் நோய் தடுப்பு பிரிவு தலைவர் மருத்துவர் ராம்சே கூறுகையில், தடுப்பூசியே உயிரை பாதுகாக்கும். ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளோம். கொரோனா பரவலையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இரண்டு, டோஸ்' எடுத்துக் கொள்வது அவசியம் எனதெரிவித்தார்.