"தடுப்பூசி போட சொன்னீங்கன்னா பாம்ப வச்சு கடிக்க வச்சுருவான்"...மருத்துவ ஊழியர்களை மிரட்டிய பெண்
ராஜஸ்தான் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும்படி கூறிய மருத்தவ ஊழியர்களை பாம்பைக்கொண்டு மிரட்டிய பெண்ணின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாகிலவ் கிராமத்தை சேர்ந்தவர் கமலா தேவி. இவர் ஒரு பாம்பாட்டி. அந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு வருகை தந்த மருத்துவ ஊழியர்கள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். அதேபோல அங்கிருந்த பாம்பாட்டியான கமலா தேவி வீட்டிற்கும் அவர்கள் சென்றுள்ளனர். அப்போது அவரிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊழியர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் தன்னால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியாது என்று கூறிய அவர் மீறி கட்டாயப்படுத்தினால் பாமபை ஏவி விடுவேன் என கூடையில் இருந்த பாம்பை வெளியில் எடுத்து ஊழியர்களை நோக்கி மிரட்டினார்.
அதன் பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழியாக கமலாவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.