மகாராணி இறந்துவிட்டார்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தென்னாபிரிக்கா ஜூலு இனத்தின் மகாராணி காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா ஜூலு இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu(65) தனது கணவர் மறைவிற்குப் பின்னர் ராணி ஆனார்.
இதனிடையே ஒரு வாரத்திற்கு முன்பு உடல் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூலு தேசத்தின் மகாராணி உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவலை ஜுலுவின் பிரதமரும் இளவரசர் Mangosuthu Buthelezi அறிவித்துள்ளார்.
ஜூலு தேசத்தின் தலைமையிடம் காலியாக இருப்பதால் அடுத்த ஆட்சியாளராக யார் வருவார் என்ற எதிபார்ப்பு மக்களிடையே இருந்த்தது.
இந்நிலையில் ஜூலு இனத்தின் மகாராணி Shiyiwe Mantfombi Dlamini Zulu 5 மகன்களும் 3 மகள்களும் உள்ள நிலையில் அவர்களில் மூத்த மகன் Misuzulu இளவரசர் தான் அடுத்த அரசராக வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.