இலங்கையில் அமெரிக்க அதிகாரியின் கைப்பை திருட்டு
அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொலிஸாரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரியின் கைப்பையே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
அப் பெண் அதிகாரி கருவாத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
சம்பவம்
அவர் அருகில் உள்ள பகுதியில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் அவரது கைப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பை திருடப்பட்டதும் குறித்த அதிகாரி அச்சத்துடன் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கருவாத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் பொலிஸ் மா அதிபர்கள் பலர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பையுடன் இருவரும் தப்பியோடிய மோட்டார் சைக்கிளை தற்போது அடையாளம் கணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.