இந்த 16 இடங்கள் மிகவும் ஆபத்தானது; அமெரிக்கா எச்சரிக்கை!
கிரீஸ், அயர்லாந்து, ஈரான் உட்பட 16 இடங்கள் மிக அதிக கொரோனா ஆபத்துள்ள பகுதிகளாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (CDC) அறிவித்துள்ளது. CDC-யின் மிக அதிக கொரோனா ஆபத்துள்ள பகுதிகள் பட்டியலில் இந்த 16 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பகுதிகளுக்கு மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பயணம் செய்ய வேண்டியவர்கள் முதலில் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும். முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடும் வரை அனைத்து சர்வதேச பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என CDC அறிவிறுத்தியுள்ளது.
முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கும், தொற்றை மற்றவர்களுக்கு பரவுவதற்கும் குறைவான வாய்ப்பே உள்ளது.
இருப்பினும், சர்வதேச பயணம் கூடுதல் அபாயங்களை ஏற்படுத்துகிறது, மேலும் முழுமையாக இரண்டு தடுப்பூசி போட்ட பயணிகள் கூட, சில மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டு அதை பரப்புவதற்கும் அதிக ஆபத்து இருக்கிறது என்றும் CDC கூறுகிறது.
ஆகஸ்ட் 2ம் திகதி முதல் CDC-யின் மிக அதிக கொரோனா ஆபத்துள்ள பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 16 இடங்களாவன,
அன்டோரா, குராசோ, ஜிப்ரால்டர், கிரீஸ், குவாடலூப், ஈரான், அயர்லாந்து, ஐல் ஆஃப் மேன், கஜகஸ்தான், லெசோதோ, லிபியா, மால்டா, மார்டினிக் செயிண்ட் பார்தெலமி, செயிண்ட் மார்ட்டின் மற்றும் யுஎஸ் விர்ஜின் தீவுகள் எனபனவே ஆகும்.