கனடாவின் இந்த மாகாணங்களில் புதிய Omicron தொற்று பரவியுள்ளது
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், சர்வதேச நாடுகளின் சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கனடாவின் முக்கிய மாகாணங்கள் பலவற்றில் புதிய Omicron தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் பிற்பகல் நிலவரப்படி, கனடாவில் ஓமிக்ரான் தொற்று ஏழு பேர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தென்னாபிரிக்கா, நைஜீரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் நேரடி விமான சேவைகள் மற்றும் பயணிகளுக்கும் கனேடிய நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனிடையே, கனடாவில் எந்தெந்த மாகாணங்களளில் புதிய Omicron தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒருவருக்கு புதிய Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் சமீபத்திலேயே நைஜீரியாவில் இருந்து கனடா திரும்பியுள்ளார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆல்பர்ட்டாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நைஜீரியா மற்றும் நெதர்லாந்தில் பயணத்தை முடித்து திரும்பியதாக தெரியவந்துள்ளது.
ஒன்ராறியோவில் நால்வருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் ஒட்டாவா பகுதியில் குடியிருப்பவர்கள் எனவும், இருவரும் நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் எஞ்சிய இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் உறுதியான காரணம் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. கியூபெக்கில் பெண் ஒருவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் நைஜீரியாவில் இருந்து கனடா திரும்பியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.