"என்னை ஏமாற்றிவிட்டனர்"...டேட்டிங் ஆப் மீது வழக்கு தொடர்ந்த இளைஞர்
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தன்னை டேட்டிங் ஆப்பில் மெம்பர்ஷிப் பெற வைத்து ஏமாற்றிவிட்டதாக அந்த ஆப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளத்தில் டேட்டிங் செயலிகள் பயன்பாடு உயர்ந்து வருகிறது. அப்படி அமெரிக்காவின் டென்வெர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் டேட்டிங் ஆப், தங்களிடம் 25 - 35 வயதிலுள்ள பெண் பயனர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என விளம்பரம் செய்துள்ளது.
இதுபற்றி தங்கள் பயனாளர்களிடம் கூறி, அவர்களை மெம்பர்ஷிப் செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அந்த நிறுவனம். அப்படியான ஒரு பிரச்சாரத்தின் அடிப்படையில், 29 வயதான ஒரு பயனர் 9,409 டாலர் செலவிட்டு மெம்பர்ஷிப்பை பெற்றிருக்கிறார்.
ஆனால் மெம்பர்ஷிப் பெற்றபிறகு அதில் 18 வயது முதல் 35 வயதில் வெறும் 5 பெண்கள் தான் இருந்துள்ளனர்.
இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த அந்த இளைஞர் குறித்த நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரியுள்ளார்.